புதிய வரவுகள் »

செவ்வாய், 27 நவம்பர், 2012

புலிவலம்! 33


கணவனைப் பின்தொடரும்
மனைவிபோல்
தோட்டாவைப் பின்தொடர்கிறது
உயிர்

இரத்த ஈரத்தில்
முளைகட்டுகின்றன
கனவுகள்

சனி, 24 நவம்பர், 2012

கண்ணீர் மொழி!



அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தைதெற் காண்டார் யாம்வடக் காண்டோம்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி ஈரிலைக் கொடியார்
எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளோமே!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சோற்றுத் துருத்தி!




‘என் உயிர் பிரிவதற்குள் தமிழ் ஈழத்தைப் பார்த்துவிட வேண்டும். -கலைஞர்-
                                                            –செய்தி-
கலாம் சொன்னார்
கடைபிடிக்கிறார் கலைஞர்
கனவுகாண
--
வடைசுட கிழவியில்லை
வடைதிருடும் ஆசை
காக்கைக்கு
--
கனவுகள் மெய்ப்படுமோ
கயமைகள் கண்டக்கால்?
--
வாய்க்கரிசி போட்டவன்
வாய்க்கரிசி போடுமுன்
மலரட்டுமே ஈழம்
--
செருப்பைப்போல் தேயட்டும்
புரண்டு புரண்டு பேசும்
நா

புதன், 9 மே, 2012

ஓ! மனிதர்களே!


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் இதயங்களையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அயலாரின் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

ஞாயிறு, 6 மே, 2012

புலிகள் ஓய்வதில்லை




நம்ம
ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே

    போரில் போராளி தினம்சாகலாம்
    போராட் டம்என்றும் சாகாதது
    த்ரோகம் எதிரிக்குத் துணைபோகலாம்
    துணிவே புலிகட்குத் துணையானது
    அண்ணனின் வழிநடத்தால் ஈழம் உறுதியடா
    அடையும் விடுதலைக்கு அர்ப்பணம் குருதியடா!
    வாழவைப்பான் நாளையந்த
    மாமறவன் தாள்பணிவோமே

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள

    வீரன் மாவீரன் பிரபாகரன்
    வீணர் நமையாள விரும்பாதவன்
    தாகம் தமிழீழம் தானென்றவன்
    தாயாய் உருமாறித் துணைநின்றவன்
    எதிரியின் ஆயுதத்தால் எதிரியைத் தோற்கடித்தான்
    புலிஇவன் போலஎவன் புரட்சிக்குத் தோள்கொடுத்தான்
    வீட்டுக்கொரு ஆள்வருவீர்
    வென்றெடுப்பேன் ஈழம்என்றானே

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே



செவ்வாய், 27 மார்ச், 2012

புலிவலம்! 32



மனித உரிமைமீரல்
நிகழ்த்தப்பட்டிருக்கிறது
மனிதர் அல்லாதவர்களால்

ஞாயிறு, 11 மார்ச், 2012

வீசுவதோ நற்செய்கை வீண்!

கல்நன்றாய்க் கற்றுக் கருத்தாய் மடமைதனைக்
கல்நன்றாய் என்றால் கருதாமல் -கல்லென்ற
ஆசிரியர் மூச்சறுக்க அந்தோ கொலைவாளை
வீசுவதோ நற்செய்கை? வீண்!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

புலிவலம்! 31



காசினியெங்கும்
காதிலிகளாய்ப் போனதால்
ஈழமெங்கும்
ஏதிலிகளாய்ப் போனோம்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புலிவலம்! 30



இனியெந்தத்
தமிழ் மங்கையின்
தளிர் வயிற்றிலும்
மழலைகள் பிறக்கவேண்டாம்
காடையருக்கான
மரணங்கள் பிறக்கட்டும்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

புலிவலம்! 29



இனப்படுகொலை என்று
இப்பொழுது இயம்புகின்றார்கள்
இனப்படுகொலை நிகழ்ந்தபோது
இனம்கண்டு கொள்ளாத
மனப்படுகொலையாளர்கள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

புலிவலம்! 28



பேடிகை ஓல்வாள்தானே
இந்திய அரசும்
அதிகாரமும்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

புலிவலம்! 27



எப்படியெல்லாம் கொலைசெய்யலாம்
என்பதை வேண்டுமானால்
இட்லிரின்
பாசிசப் படையிடம்
பயின்றுகொள்ளலாம்

எப்படியெல்லாம் கற்பழிக்கலாம்
என்பதை
காடைய காட்டுமிராண்டிகளிடமே
கற்கமுடியும்

திங்கள், 30 ஜனவரி, 2012

புலிவலம்! 26



பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்
குண்டுதுளைத்த உடல்களையும்
கண்டுதுளைக்க வருகின்றன
சிங்கள ஆணுறுப்புக்கள்
பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

புலிவலம்! 25



அகிம்சை சாமி
ஆயுத சாமி என
ஆயிரம் சாமி இருந்துமென்ன
மொத்த சாமியும்
புத்தசாமிக்குப் பயந்து
மௌன சாமிகளாகிவிட்டனவே

செவ்வாய், 24 ஜனவரி, 2012

புலிவலம்! 24



ஐம்புலன்கள் வேண்டாம்
யாக்கையில் வலிவும் வேண்டாம்
ஆண்குறி ஒன்றுபோதும்
சிங்களராம் எங்களின்
சேனையில் சேர

புலியைக் கண்டால்
புறங்காட்டு
கிளியைக் கண்டால்
கற்பழி
இதுவே சேனையின்
சீர்மிகு மந்திரம்

சனி, 14 ஜனவரி, 2012

எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.


மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

தீரா விடம்! 4

அணுமின்னுக்கு எதிராக
ஆதரவு கூடுங்குளம்
கூடங்குளம்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

தீரா விடம்! 3

மயக்கம் கொள்ளவைக்கிறது
ரம் மட்டுமல்ல
ஸ்பெக்ட்ரமும்

சனி, 7 ஜனவரி, 2012

தீரா விடம்! 2



நிறைய நீரிருந்தும்
கொஞ்சமும் ஈரமில்லை
கர்நாடகாவிற்கு

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தீரா விடம்! 1

சென்ற நூற்றாண்டில்
தமிழினம்
தற்கொலை செய்துகொள்ள
மொண்டு மொண்டு
மாந்தியும்
தீரா விடம்
திராவிடம்